Thursday, December 5, 2013

குட்டிக் கதைகள். .. குட்டும் கதைகள். ..

ஒரு சீடன் தன குருவிடம் கேட்டான்,

''நல்லதைப் படைத்த ஆண்டவன் தானே கெட்டதையும் படைத்துள்ளான்.அதனால் நல்லதை மட்டும் ஏற்பதுபோல கெட்டதையும் ஏற்றால் என்ன?''

குரு சிரித்துக் கொண்டே,

''அது அவரவர் விருப்பம்,''என்றார்.

பகல் உணவு வேலை வந்தது.அந்த சீடன் தனக்கு அளிக்கப்பட உணவைப் பார்த்து அதிர்ந்து விட்டான். ஒரு கிண்ணத்தில் பசு மாட்டு சாணம் மட்டும் வைக்கப்பட்டு அவனிடம் உண்ணக் கொடுக்கப்பட்டது.

சீடன் விழித்தான். குரு புன்முறுவலுடன் அவனிடம் சொன்னார்,

''பால்,சாணம் இரண்டுமே பசு மாட்டிடம் இருந்து தானே வருகிறது. பாலை ஏற்றுக் கொள்ளும்போது சாணியை ஏற்றுக் கொள்ளக் கூடாதா?''

நல்ல செய்திகளைப் பகிர்வோம் பயனடைவோம்.

No comments:

Post a Comment